வீட்டில் சரியான பாதுகாப்பு கண்காணிப்பு இன்மையே மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு காரணம் ! என்கிறார் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம்.. போதை பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களில் கூடுதலான வீதத்தினர் மாணவர்களாகவே காணப்படுகின்றனர் வீட்டிலே சரியான பாதுகாப்பு, கண்காணிப்பு என்பன கிடைக்குமாக இருந்தால் நிற்சயமாக அந்த குழந்தை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகாது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் .தெரிவித்தார் நாட்டிற்காக ஒன்றிணைவேம் எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடைவிலகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி திட்ட முகாமைத்துவ பணிப்பாளர் இதயகுமார் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(11) வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் சிறுவர்கள்தான் இந்த நாட்டின் நாளைய தலைவர்கள் நீங்கள் பலமாக இருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும். பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீள இணைக்கின்ற பொழுது பல பிரச்சினையாக எழுகின்றது. அதாவது இவர்கள் குறித்த வகுப்பில் மெல்லக்கற்கும் மாணவர்களாகவே காணப்படுகின்றனர். அன்பான பெற்றோர்களே உங்களது பிள்ளைகள் கல்வியில் மேம்படவில்லையென்றால் சமூதாயம் உங்களை ஒதுக்கி வைக்கின்றவர்களாவே காணப்படுவீர்கள். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கின்ற இந்த பாதகமான செயற்பாட்டுக்கு பெற்றோர் என்ற வகையில் நீங்கள் துணைபோகக்கூடாது. எந்த குழந்தையும் கல்வி அறிவில் மேம்பட்ட குழந்தையாக பிறப்பதில்லை பொற்றோரின் பங்களிப்பு மூலமே அது சிறந்து விளங்குகின்றது. நீங்கள் உங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி சிறந்த கல்வியினை பெற வேண்டும் என நினைத்தால் மாத்திரமே உங்களது குழந்தை கல்வியில் சிறந்து விளங்கும் இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மிகவும் கவலைக்குரிய விடயமாக காணப்படுவது என்னவெனில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களில் கூடுதலான வீதத்தினர் மாணவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு குறிப்பாக வீட்டிலே இருந்து சரியான பாதுகாப்பு கண்காணிப்பு என்பன கிடைக்குமாக இருந்தால் நிற்சயமாக அந்த குழந்தை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகாது என்பது உண்மையான விடயமாகும். எனவே இந்த விடயத்தில் ஏனையோரை குற்றம்சாட்டுவதை விடுத்து பெற்றோராகிய உங்களுக்கு இருக்கின்ற குழந்தைகளை சமூகத்திற்க பொருத்தமானவர்களாக வளர்த்தெடுக்கும் கடைமை உங்களுடையதாகும். எனவே அன்பான மாணவர்களே நீங்கள் பெரிய தொழில்களில் சிறந்து விளங்குவதற்கு கற்கவேண்டும் என்று நான் கூறவில்லை நீங்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வாழ்வதற்காவேனும் நீங்கள் கற்கவேண்டும். இதனால்தான் கூறுகின்றேன் .கல்வி மாத்திரம் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று பாடசாலைக்கு செல்லுங்கள் என நான் கேட்க்கவில்லை நல்ல ஒழுங்கமுள்ள மாணவர்களாக, சிறந்த மாணவர்களாக உங்களால் எதிர்காலத்தில் ஒரு தொழிலினை பெற்றுக்கொள்ள கூடிய மாணவர்களாக நீங்கள் மாறுவதே இந்த சமூதாயத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும் என அவர் இதன்போது தெரிவித்தார். காரைதீவு நிருபர் |
பிறசெய்திகள்1 >