நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த தில்ஷாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது இளைஞர் கழகங்களுடாக ஆதரித்ததன் மூலம் சிறந்த வெற்றியை பெற்றுள்ளார். இவரது வெற்றிக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பூரண ஆதரவு வழங்கியுள்ளார். இதற்கமைவாக பிரதி அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தில்சாத்தின் வெற்றிக்காக கட்சியின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இளைஞர் கழகங்களுடாக வாக்களித்துள்ளதுடன் களத்தில் நின்று வெற்றிக்காக உழைத்துள்ளனர். இவ்வாறு செயற்பட்ட கட்சியின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு வெற்றி பெற்ற தில்ஷாத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். (அகமட் எஸ். முகைடீன்) |
பிறசெய்திகள்1 >