[Untitled]‎ > ‎

07.03.15- மனநிலை தெளிய வேண்டும் !

posted Mar 6, 2015, 6:50 PM by Unknown user
உரசல்கள் ஒழிய வேண்டும்
விரிசல்கள் விலக வேண்டும்
தெருதனில் தீய தெல்லாம்
சிதறியே ஓட வேண்டும்

மொழியலை ஓய வேண்டும்
முரணிலை ஒழிய வேண்டும்
மருணிலை நீங்க வேண்டும்
மனநிலை தெளிய வேண்டும்

அழிவுகள் அகல வேண்டும்
அனைவரும் இணைய வேண்டும்
தெளிவுகள் பிறக்க வேண்டும்
சிறப்பெலாம் சேர வேண்டும்

சமயங்கள் யாவும் சேர்ந்து
சமரசம் பேண வேண்டும்
இமயமாய் உள்ள சிக்கல்
இறந்துமே போக வேண்டும்

பெருமைகள் பேசி நிற்போர்
பிதற்றலை விடவே வேண்டும்
கருவதில் நல்ல எண்ணம்
பெருகியே நிற்க வேண்டும்

தேசியம், மொழி சாடி நிற்போரும்
ஜாதி மத பேத வெறியர்களும்
சந்ததிகளே எம் எதிர்காலமென
மாறி மனநிலை தெளிய வேண்டும் !!! 

இன நிம்மதி கிடைக்கும் எனும்
தீர்க்க சிந்தனையுடன்

கே.சீ.கே. ( குமார் )ஜெர்மனி.


Comments