என்னை சுமந்தவள் நான் ஏடுகளை சுமக்க தினம் மண்ணைச் சுமந்தவள்...! கூட்டியும், பெருக்கியும், சேர்த்த கூலிக்காசில் என்னை கூட்டலும், பெருக்கலும் படிக்க வைத்தவள்....! காதணிகளையெல்லாம் விற்றுவிட்டு- எனக்கு உவமையணியும், உருவக அணியும் வாங்கிக் கொடுத்தவள்....! தான் நடப்பதற்குக் கூட செருப்புகளை வாங்காமல்- நான் பறப்பதற்காக சிறகுகளை சேமித்துக் கொடுத்தவள்....! கடிதம் கூட எழுதத் தெரியாத இவள்தான் என்னை கவிதை எழுத வைத்தவள்....! என்னைச் சுமந்தவள் நான், ஏடுகளைச் சுமக்க- தினம் மண்ணைச் சுமந்தவள் இன்று - மண்ணுக்குள்ளே புதைந்துவிட்டாள் ...! அந்த அன்னையை சுமக்க முடியாமல்- இன்று தன்னையே சுமக்க முடியாதவனாய் -தள்ளாடி......தள்ளாடி..... நடை பிணமாக்கினாள் என்னை அந்தமறக்க முடியாத தெய்வம் !!!- அன்புடன் குமார் ( கே.சீ.கே.) ஜெர்மனி. |
[Untitled] >