[Untitled]‎ > ‎

26.12.2012- சுவாமி விவேகானந்தர் பாறையில் தியானித்த சங்கல்ப தினம்..

posted Dec 25, 2012, 10:59 AM by Web Team
சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் தியானித்த தினம் சங்கல்ப தினம் 25 மார்கழி. வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் தவம் செய்த தினத்தை சங்கல்ப தினம் என்று  உலகெங்கும் நேற்று  25 ம் திகதி கொண்டாடப்பட்டது.

இந்தியாவினதும் இந்து தர்மத்தினதும் எழுச்சிக்கும் சிக்காகோவிற்குச் செல்வதற்கான ஆணையைப் பெறுவதற்குமாக இத்தவம் சுவாமியினால் மூன்று தினங்கள் நிகழ்த்தப்பட்டதாகும்.அவர் தியானம் செய்த பாறையை இன்றும் கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே விவேகானந்த பாறையாக மிளிர்கிறது.

1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 25 26 ஆகிய திகதிகளில் சுவாமி இவ்வுலக ஈடேற்றம் கருதி தியானிக்கிறார். தவம் செய்கிறார்.

அதனை நினைவுகூர்ந்து நடுநாளாகிய டிசம்பர் 25 ம் திகதியை சங்கல்ப தினமாகக் கொண்டாடுவது வழக்கமாகும்.சங்கல்பம் என்பதை சங்கற்பம் என்றும் கூறலாம். சங்கற்பம் என்றால் எண்ணம் .

இலங்கையில் இம்முறை இச்சங்கல்ப தினம் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தினத்தையொட்டி சிறப்பாக விரிவாக கொண்டாடப்படவிருக்கிறது.இது தொடர்பாக இந்தியாவை அடித்தளமாகக் கொண்டியங்கும் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் இலங்கைக்hன பிரதிநிதி இரா.இராதாகிருஸ்ணன் ஜீ சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் இந்தியாவை அடித்தளமாகக் கொண்டியங்கும் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் இச் சங்கல்ப தினம் 150 பிரதேசங்களில் 2 லட்சம் இந்து வீடுகளுக்கு சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் பொறித்த ஸ்ரிக்கர் மற்றும் நந்திக்கொடி விநியோகம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படவிருக்கிறது.

இந்தியாவின் கன்னியாகுமரியில்  விவேகானந்தர் தியானம் செய்த இடம்  'விவேகானந்தர் பாறை' என்று அழைக்கப்படுகிறது. இன்றும் அது பலரையும் தன்பால் ஈர்க்கும் முக்கிய கேந்நதிர ஸ்தானமாகவுள்ளது.

கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு ஆன்மீக ஞானம் பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர்.
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். 
அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும் அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். 
தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
இனி சுவாமி விவேகானந்தர் பற்றிப் பார்ப்போம்.

பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும்இ இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Pசநளனைநnஉல ஊழடடநபந) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (ளுஉழவவiளா ஊhரசஉh ஊழடடநபந) தத்துவம் பயின்றார். 
அங்கே மேல்நாட்டு தத்துவங்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும்இ உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும்இ அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில்  உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
இராமகிருஷ்ணருடன்
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகஇ இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
 இராமகிருஷ்ணரின் போதனைகள்இ உருவ வழிபாடுஇ அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல்இ இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால்இ விவேகானந்தரால்இ பக்தி மார்க்கம்இ மற்றும் ஞான மார்க்கம்இ இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
துறவறம்
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம் பண்பாடு வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். 
அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும் அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம்இ நிகழ்காலம்இ மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
மேலைநாடுகளில்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம்இ அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். 
சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்தகருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க்இ மற்றும்  லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
இந்தியா திரும்புதல்
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள்இ அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும் இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. 
பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.
மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் விவேகானந்தர்.

விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா 
(சுவாமி விவேகானந்தரின் 150வது ஜனனதின விழா 
பிரதேச விழாக்குழச் செயலாளர் காரைதீவு)



Comments