[Untitled]‎ > ‎

27.07.15- சுவாமி வித்தகர் விபுலாநந்தர் அவர்களின் 68 வது நினைவு தினத்துக்காக..

posted Jul 26, 2015, 6:40 PM by Unknown user
"" முத்தமிழ் வித்தகர் வாழ்க மாதோ ""
 (அன்புடன் கே.சீ.கே. ஜெர்மனி 15.7) 
    
 சீர்மிகுந்த காரையூரின் சீராளர்;
செகம்புகழும் முத்தமிழ் தந்த பேராளர்;
பங்குனி இளவேனில் திருநாளில்,
கதிரெனவே அவதரித்தார் மயில்வாகனன் .

நேர்த்தியுடன் பாநெய்த தறியாளர்;
நிலையறிந்து நூலிழைத்த குறியாளர்;
வித்தகர் செவ் வாய்மலர, உருவான
பைந்தமிழ்ச் சொல்தங்கக் கருவூலம்.

கல்வியினால் காழ்ப்புதன் னிடமில்லாமல்
கவிக்குலத்து முன்னவரைப் படம்பிடித்தார்;
ஜாதி புல்முளைத்தே இருளடைந்த இந்நாட்டை,
பொலிவாக்கும் திருப்பணிக்கே வந்துதித்தார்.

முந்தையரின் புகழலையில் பொருந்தியதால்,
முகிழ்ந்தகடற் செல்வி ஆழம் இருந்தவாறே
மதங்கசூளாமணி,ஆங்கிலவாணி பாலித்தாள்;
யாழ்நூல் தொடுத்ததனை மாலையிட்டார்.

பாவானம் பார்த்தறியா விடிவெள்ளி;
ஈழத்து ஏழை பெண் கல்வி வாழ்வு 
தமிழ் விடுதலையின் தீக்கொள்ளி;
கண்ணகி மாகாளியம் மகாசக்தி, அருட்சக்தி,
முத்தமிழாய் வந்ததமிழ்ப் பெரும்சக்தி.

வளர்கின்ற பொற்காலம் தமிழனுக்கே
வாராதோஎன விசனிக்கின்ற பொழுதினிலே
களமிறங்கித் துறைதோறுமெழுதிவைத்தார்;
ஈழமதில் மனிதநேயம் நாடிநின்றார்

புலர்காலைப் பொழுதுவரும் ஞாயிறுபோல்,
தமிழுக்கே  எழுத்தாயுதப் பாயிரத்தால்
தளர்வின்றிச் சமூகவானில் சிறகடித்தே,
சமத்துவத்தைத் தாரணிகேட்க முரசடித்தார்

செந்தமிழ்ப் பாலதினில் மொய்ம்புறவே,
தேசபக்தி, தெய்வபக்தி நெய்யெடுத்தார்;
வந்தனைகள் புரிந்துநலம் சூழ்ந்திடவே,
வையமெலாம் விபுலர்புகழ் வாழ்கமாதோ !
அகிலமெல்லாம் வித்தகர் வாழ்கமாதோ !!

Comments