தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது.
கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம்.
கவின்கலைகளை: அரங்காடல் கலை, எழுத்துக்கலை, கட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம். அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்): நடனம், இசை, நாடகம், சொற்பொழிவு, தற்காப்பு கலை எழுத்துக்கலைகள்: கதை, கவிதை, கட்டுரை, நாடகம் கட்புலக் கலைகள்: ஓவியம், சிற்பம், ஒளிப்படம் எனினும் இது கலை, இது கலை அல்ல என்று எச் செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களில் ஆயப்படவேண்டிய ஒன்று. கலைகளை வகைப்படுத்தல் பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை வகைப்படுத்துவது கடினம். கா.சிவத்தம்பி கலைகளை வகைப்படுத்துவது நோக்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும், ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு என்கி்றார்.
எளிமையாகக் கற்கக்கூடிய கலைகளைப் பொதுமக்கள் கலைகள் என்றும், நீண்ட பயிற்சி அல்லது பொருள் செலவு செய்து கற்கவேண்டிய கலைகளை நுண்கலைகள் என்றும் கூறலாம். மேலும், கலைவெளிப்பாடுகள் இனம் சார்ந்ததாக இருக்கும் பொழுது தமிழர் வழி கலைகள், பிற இனப் பிரதேச மேலும், கலைகளின் தன்மைகளை பொறுத்து நிகழ் கலைகள், கட்புலக் கலைகள், தொழில்சார் கலைகள் என்றும் வகைப்படுத்தலாம். இவை தவிர மெய்யியல் கலைகள் என்னும் பிரிவும் உண்டு. அவையாவன: சூரிய கலை, சந்திரகலை (இடகலை), அக்கினி கலை. இவைகளை "சரவியல்" வரையறுக்கின்றது. |
[Untitled] >