[Untitled]‎ > ‎

தாய்..

posted May 31, 2013, 10:31 AM by Web Team
ஈரயிந்து மாதங்கள் சுமந்தவள்                                                                   
இடர்கள் துன்பங்கள் கடந்தவள்
மண்ணிலே பல மாந்தரை 
மகான்களாக்கி தந்தவள்-தாய்

ஆயிரம் உறவுகள் இங்குண்டு    
ஆயினும் தாய் போல் யாருண்டு
கண்ணெதிரே நின்றிடும் தெய்வமவள்
கண்மணியாய் உன்னை காத்திடுவாள்-தாய்

உற்றாரும் சுற்றாரும் ஊராரும்
உத்தம தாய்க்கு ஈடாவாரோ
நீயுறங்க தன்னுறக்கம் தொலைத்தாள்
நீயுணவுண்ண பட்டினி தவமிருந்தாள்-தாய்

மரம்போல் நீயிருந்தாலோ
மண்ணாகி உன்னை தாங்கிடுவாள்
கண்போல் நீயிருந்தாலோ
கண்ணிமையாகி உன்னை காத்திடுவாள்-தாய்

ஆண்டுதோறும் விழாக்கள் பூசைகள் 
ஆண்டவனுக்கு செய்வதிலும்
பெற்றவள் பாதமதை ஒரு நாளெனும்
பெருமையுடன் வணங்கு பேரின்பம் பெறுவாய்...

சமர்ப்பணம் - உலகிலுள்ள அத்தனைகோடி அன்னையர்க்கும்..

ஆக்கம் - புவனேந்திரன் நிரோஷன் 

Comments