02.08.16- பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை..

posted Aug 2, 2016, 10:36 AM by Habithas Nadaraja
புனிதப் பிற­வி­யா­கிய மனிதப் பிறவி எடுத்த ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தந்­தை­யாக விளங்­கு­ப­வ­ரது ஆத்­மா­வுக்­குப்­பி­திர்க்­கடன் செலுத்­து­கின்ற ஆடி அமா­வாசைத் தினம் இன்­றாகும். ஆடி­மாதம் பிறந்து விட்­டாலே கூடவே நல்­ல­ ம­கிமை நிறைந்த விர­தங்­களும் விழாக்­களும் 
வரத்­து­வங்­கி­விடும்.

ஆடிப்­பிறப்பு, ஆடிப்­பூரம், ஆடிச்­செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்­திகை, ஆடி அமா­வாசை என்று அடுக்­க­டுக்காய் வரும் விசே­டங்கள் அனைத்­துமே மிகுந்த சிறப்­புடன் கூடி­ய­னவாகும் ஆயினும் இந்த ‘ஆடி அமா­வாசை’ தனிச்­சிறப்பு மிக்­கது. இறந்­து­விட்ட தந்­தை­யி­னது 
ஆத்­மா­வுக்குப் பிள்­ளைகள் பிதிர்க்­கடன் செலுத்தத் தவ­றக்­கூடாது.


இன்­றைய ஆடி அமா­வாசை நன்­னா­ளிலே பூத­வு­டலை நீத்துப் புக­ழு­டம்பைப் பெற்­று­விட்ட தந்­தை­க்குப் பிதிர்க்­கடன் செலுத்த வேண்­டி­யது தலை­யாய கட­மை­யாகும். “தந்தை சொல்­மிக்க மந்­தி­ர­மில்லை" என்­ப­தற்­கி­ணங்க இவ்­வு­ல­கிலே நம்மைப் பிறக்கச் செய்து நேர்­மை­மிக்க நல்­வ­ழியில் நடக்கச் செய்து சுகமே வாழ­வைத்த அன்புத் தெய்­வத்தை நாம் மறக்­கக்­கூ­டாது.

நமது மூதா­தை­யர்கள் "நாம் இவ்­வு­லகில் இப்­ப­டித்தான் வாழ­வேண்­டு­மென்று" வாழ்ந்து காட்டிப் போயி­ருக்­கின்­றார்கள். அந்த 
நெறி­மு­றையை நாம் உதா­சீனம் செய்­யக்­கூ­டாது. தந்­தையின் ஆன்­மா­வுக்­கான பிதிர்க்­க­டனை நாம் கட்­டாயம் செய்­தே­யாக வேண்டும். இந்தப் பூவு­லக வாழ்க்­கையை விடுத்து தேக­வி­யோகம் செய்­ய­நேர்ந்தால் அந்தப் பிதி­ருக்குப் பிரீதி செய்­ய­வேண்­டி­யது பிள்­ளை­களின் தலை­யாய கட­னாகும்.

இன்­றைய ஆடி அமா­வாசைத் தினத்­தன்று காலையில் எழுந்து புனித புண்­ணிய நீராடி சந்­தி­யா­வந்­தனம் முடித்து பக்­க­த்தி­லுள்ள 
முரு­க­னு­டைய ஆல­யத்­துக்கோ அன்றி பிள்­ளையார், சிவன், அம்மன் கோவி­லுக்கோ சென்று அந்­தண சிவாச்­சா­ரி­யா­ரி­ட­மி­ருந்தோ அல்­லது சர்­மா­வி­ட­மி­ருந்தோ தர்ப்பை ஒன்றை வாங்கி அணிந்து விர­தத்தை ஆரம்­பிக்க ­வேண்டும். இந்த ஆடி அமா­வாசை விர­தத்­தின்­போது 
அறு­சுவை உணவு தயார்­பண்ணி இறந்­து­போன தந்­தையின் ஆத்­மா­வுக்குச் சமர்ப்­பணம் செய்­தல்­வேண்டும்.

"தந்­தை­யோடு கல்­வி போம்" என்­பார்கள். பெரிய அள­வி­டற்­க­ரிய கிடைத்­தற்­க­ரிய செல்வம் கல்விச் செல்வம். இதனை எமக்கு அளிப்­பவர் தந்­தையே. ஆகவே அவர் இறந்து­விட்டால் கல்­வியும் அற்­றுப்­போய்­விடும் என்­பது ஆன்றோர் நம்­பிக்கை.

மானி­ட­வர்க்­கத்­தி­ன­ருக்கு ஒரு வருடம் தேவர்­க­ளுக்கு ஒருநாள் என்ற கணக்கில் தைமாதம் முத­லாக ஆனி­மாதம் ஈறாக உள்ள ஆறு மாதங்­க­ளுக்கு பகற்­பொ­ழு­தாகும். இது உத்­த­ரா­ய­ண­காலம் என அழைக்­கப்­­பெறும். பின்பு ஆடி மாதம் முத­லாக மார்­கழி மாதம் ஈறாக வரும் ஆறு­மாதங்­களும் தேவர்­க­ளுக்கு இரவுப் பொழு­தாகும். இது தட்­ச­ணா­யன காலம் என அழைக்­கப்­பெறும்.

இந்த முறையைக் கொண்டே ஆடி அமா­வாசை நாளா­னது பிதிர்­க்கடன் செலுத்த உகந்த நாளாகக் கொள்­ளப்­பட்­டது. இன்­றைய விரத நாளில் "காத்­தோட்­டிக்காய்" என்னும் காயும் பொரித்துப் படைக்­கப்­படும் வழக்கம் தொன்­று­தொட்டு இருந்து வரு­கின்­றது. பிதிர்­க­ளுக்குக் கசப்­பான உணவில் பிரீதி அதிகம். அதனால் தான் காத்­தோட்­டிக்­காயும் பாகற்­காயும் விர­தத்­திற்கு நிவே­தனம் செய்­யப்­ப­டு­கின்­றது.

மேலும் “அமா என்­பது ஓரி­டத்திற் பொருந்­தி­யது; குவிந்­தது; அடுத்­தது என்று கரு­த்துப்­ப­டு­கி­றது. ஆகவே சூரி­யனும் சந்­தி­ரனும் ஓர் 
இரா­சியிற் சஞ்­ச­ரித்து உற­வாடும் நாளே அமா­வா­சை­யாகும். இவ்­வு­லக இயக்­கத்­துக்கு மூல­கா­ர­ண­ராக இருப்­பவர் சூரி­யனே. ஆனால், 
சந்­திரன் மிகுந்த மன­ம­கிழ்ச்­சிக்கும் இன்­பத்­துக்கும் தெளிந்த அறி­வுக்கும் தலை­வ­ராக இருக்­கின்றார். அபுத்தி பூர்­வ­மாகச் செய்த வினைகள் அந்­தி­யேட்டி, தக­னக்­கி­ரி­யை­களால் மாறும். புத்­தி­பூர்­வ­மாகச் செய்த வினைகள் நாம் அனு­ப­வித்­தே­யா­க ­வேண்டும். பிதிர்க்­கடன் செய்­யாது விடு­வது பாவச் செய­லாகும்.

ஆகவே, இன்றைய நல்ல நாளில் ஓர் அந்தணர் மூலமாகதர்ப்பையிலான பவித்தி­­­ரத்தை விரலில் அணிந்து எள்ளுந் தண்ணீரும் இறைத்து ஆன்மாவுக்கு பிரீதி செய்யவேண்டும். இயலுமாயின் அரிசி காய்கறிவகைகள் தானமும் செய்யலாம். ஆகவே இன்றைய ஆடி அமாவாசை விரதத்தை முறையாக அனுஷ்டித்து பிதிர்க் கடன் செலுத்தி இவ்வுலக நல் வாழ்க்கைக்கு அடிகோலுவோமாக.





Comments