03.04.20- இன்றைய ராசி பலன்..(03.04.2020)

posted Apr 2, 2020, 6:34 PM by Habithas Nadaraja


மேஷம்: எதிர்பார்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.  தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.








ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.







மிதுனம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.






கடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்து வீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.







சிம்மம்:குடும்பத்தைப் பற்றியகவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தி யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.







கன்னி:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற் றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில்  புதுபொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.







துலாம்:தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். உத்தியோ கத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மதிப் புக் கூடும் நாள்.







விருச்சிகம்:கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டு. நட்பு வழியில் நல்ல செய்திகேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.







தனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படக்கூடும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கை, கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.






மகரம்:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள்வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம்பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.







கும்பம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப்பதவியில் இருப்ப வர்களின் நட்புகிடைக்கும். வெளியூரிலி ருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந் தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட் டது துலங்கும் நாள்.






                                        
மீனம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த் தனை களை நிறைவேற்றுவீர்கள். உற வினர்களின் அன்புத் தொல்லை குறையும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.
Comments