![]() |
காரைதீவு செய்திகள்
18.02.21- உலகின் முதல்தமிழ்ப் பேராசிரியர் பிறந்த மண்ணின் வாரிசுகளான நீங்கள் பாக்கியசாலிகள்..
உலகின் முதல்தமிழ்ப்பேராசிரியர் பிறந்தமண்ணின் வாரிசுகளான நீங்கள் பாக்கியசாலிகள் குழந்தைகளுக்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில் வாழ்த்து.. உலகின் முதல்தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலர்த அடிகளார் பிறந்தமண்ணின் வாரிசுகளான நீங்கள் உண்மையில் பாக்கியசாலிகள். இவ்வாறு விபுலாநந்தா குழந்தைகளுக்கு வாழ்த்துத்தெரிவித்துரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் குறிப்பிட்டார். புதிய குழந்தைகளை வரவேற்கும் நிகழ்வு காரைதீவு விபுலாநந்தாமொன்ரிசோரி ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ரம்யா தலைமையில் சுகாதாரநெறிப்படி நடைபெற்றது. பிரதமஅதிதியாக தவிசாளரும் கௌரவஅதிதியாக பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்து சிறப்பித்தனர். தவிசாளர் ஜெயசிறில் மேலும் பேசுகையில்: தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பார்கள். உண்மை.அதுபோல படிக்கக்கிடைக்கின்ற பாடசாலையும் தலைவிதிப்படிதான் அமைகின்றது. உங்களுக்கு சிறந்த பாடசாலை கிடைத்ததில் மகிழ்ச்சி.வேகத்துடன்கூடிய விவேகம் கொண்டநீங்கள் நிச்சயம் நல்ல கல்வியைப்பெற்று நற்பிரஜையாக மிளிரவாழ்த்துகிறேன் என்றார். (காரைதீவு சகா) |
17.02.21- மீனாட்சிஅம்மனின் மகா கும்பாபிசேகம் தொடர்பில் கலந்துரையாடல்..
வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஆலயத்தில் நடைபெற்றது. ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆலயநிருவாகசபையினர் ஆலோசகர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். பிரபல இந்துகுருவான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்களின் தலைமையிலான குழுவினர் கும்பாபிசேகத்தை செய்வதுஎன்றும் சித்திரைமாத இறுதிப்பகுதியில் இதனை நடாத்துவதென்றும் முடிவானது. எதற்கும் அம்பாறை மாவட்டத்தின் இந்துக்கள்வாழ்கின்ற சகலகிராமங்களைச்சேர்ந்த பிரமுகர்களையும் அழைத்து மிகவிரைவில் பொதுக்கூட்டமொன்றை நடாத்துவதென்றும் அதில் மகாகும்பாபிசேகக்குழு மற்றும் உபகுழுக்களைத் தெரிவுசெய்வதென்றும் முடிவானது. (வி.ரி.சகாதேவராஜா) |
08.02.21- காரைதீவில் மூடப்பட்ட 3பாடசாலைகள் இன்று திறப்பு..
கல்முனை சுகாதாரப்பிராந்தியத்திலுள்ள காரைதீவில் ஏழு மாணவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து மூடப்பட்ட மூன்று பாடசாலைகளும் இன்று(08.02.2021) திறக்கப்படவிருக்கிறது என காரைதீவுப்பிரதேசசுககாதாரவைத்தியஅதிகாரி டொக்டர் தஸ்லிமா பசீர் தெரிவித்தார். கடந்த 29ஆம் திகதி தொடக்கம் ஒருவாரகாலத்திற்கு இம்மூன்று பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை தெரிந்ததே. சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கேற்ப காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி சண்முகா மகா வித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளே இவ்விதம் மூடப்பட்ட பாடசாலைகளாகும்.குறித்த பாடசாலைகளுக்கு நேற்று(07.02.2021) சுகாதாரவைத்தியஅதிகாரிபணிமனையினால் தொற்றுநீக்கி வீசப்பட்டது. இதுவரை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஜந்துமாணவர்களும் இ.கி.மி.பெண்கள் பாடசாலை மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியில் தலா ஒரு மாணவரும் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர். முன்னெச்சரிக்கையாகவே இவ்விதம் பாடசாலை மூடப்பட்டதாகவும் அதன்பிறகு எந்தவொரு மாணவருக்கும் தொற்று ஏற்படவில்லை. தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் யாரும் அஞ்சத்தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறினார். ( வி.ரி.சகாதேவராஜா) |
03.02.21- இன்று காரைதீவில் மகா கும்பாபிசேகம்..
காரைதீவு பிரதானவீதியின் முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் புனரமைக்கப்பட்ட அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று(03.02.2021) நடைபெறும். நேற்றுமுன்தினம் அங்கு கிரியைகள் ஆரம்பமாகின. நேற்று(02.02.2021) பூராக பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்திவழிபட்டனர். சுகாதாரடைமுறைப்படி பக்தர்கள் மாஸ்க் அணிந்து இக்கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். |
23.01.21- காரைதீவில் மாணவர் இருவருக்கு கொரோனா..
காரைதீவில் மாணவர் இருவருக்கு கொரோனா 105மாணவர் தனிமைப்படுத்தலில் திங்களன்று பிசிஆர். காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி தஸ்லிமா கூறுகிறார்.. காரைதீவில் இரு மாணவர்களுக்கு முதற்தடவையாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து அவர்களோடு தொடர்பிலிருந்த மூன்று வகுப்புகளில் கற்கும் 105மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையில் பணியாற்றும் காரைதீவைச்சேர்ந்த 50வயதுடைய முகாமைத்துவ உதவியாளர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று இனங்காணப்பட்டதாக (21.01.2021) பகல் எமக்கு அறிவிக்கப்பட்டது. அவரை வைத்தியசாலையிலிருந்தே மட்டக்களப்பிற்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அதனையடுத்து நாம் உடனடியாக செயற்பட்டு அவரது வீட்டுக்குச்சென்று விசாரித்தபோது தமது 3 பிள்ளைகளும் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் கற்பதாகக்கூறினர். அவர்களை வரவழைத்து அன்ரிஜன் சோதனை செய்தபோது தரம் 11 மற்றும் தரம் 13 வகுப்புகளைச்சேர்ந்த அவரது மகனும் மகளும் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 4ஆம் வகுப்பைச்சேர்ந்த மூன்றாவது மகளுக்கும் தாய்க்கும் தொற்றில்லை என முடிவு வந்துள்ளது.தொற்றுக்கள்ளான பிள்ளைகளை மருதமுனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மூன்று மாணவர்களும் பயிலும் 3 வகுப்புகளைச்சேர்ந்த 105 மாணவர்களையும் குடும்பத்தையும் நேற்றிலிருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம். அவர்களில் குறித்த 3 மாணவர்களுடன் நெருங்கிப்பழகிய மாணவர்களை எதிர்வரும் (25.01.2021) பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். தேவைப்படின் அந்த வகுப்புகளுக்கான அவசியமெனக்கருதப்படும் ஆசிரியர்களையும் பிசிஆர் செய்ய திட்டமிட்டுள்ளோம். பாடசாலை மூடப்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளருடன் ஆலோசனை செய்தே அத்தீர்மானம் எடுக்கப்படும் என்றார். இதேவேளை இதுவரை கல்முனைப்பிராந்தியத்திற்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 54பேருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது. இதுவரை காரைதீவில் 1666பேருக்குபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றுமட்டும் 40பேருக்கு பிசிஅர் அன்ரிஜன் செய்யப்பட்டது. இறுதியாக குறித்த 2மாணவரும் மேலுமொருவருமாக 3பேர் இனங்காணப்பட்டிருந்தனர். மாளிகைக்காட்டைச்சேர்ந்த 25பேர் தொற்றுக்கிலக்காகி சிகிச்சை பெற்றுவருகின்றனர். அனைவரும் ஓரிருநாட்களில் சிகிச்சைமுடிந்து வீடு திரும்பவுள்ளனர். ஏலவே 17பேர் சிகிச்சையைபூர்த்திசெய்து வீடு வந்துவிட்டனர்.இன்னும் 36பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறுகின்றனர். எதுஎப்படியிருப்பினும் காரைதீவில் ஏற்பட்டுள்ள இத்தொற்றுக்கள் பரம்பலடையவில்லை மாறாக கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக அவர் மேலும் சொன்னார். இதுஇவ்வாறிருக்க மாணவர்கள் இவ்விதம் தொற்றுக்குள்ளானமை காரைதீவில் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (2201.2021) பாடசாலைகளுகக்கு வழமைக்கு மாறாக குறைவான மாணவர்களே சமுகமளித்திருந்தனர். ( வி.ரி.சகாதேவராஜா) |
22.01.21- சட்டவிரோத கட்டடஅமைப்பைத் தடுக்கச்சென்ற தவிசாளர் உறுப்பினர் கிராம சேவையாளருக்கு அச்சுறுத்தல் பிரச்சினை நீதிமன்றம் சென்றது..
காணி நிரப்பியமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் அதே காணியில் கொட்டகை அமைக்க முற்பட்டவேளையில் அதைத்தடுக்கச்சென்ற பொலிசார் பொதுமக்கள் முன்னிலையில் தவிசாளர் உறுப்பினர் மற்றும் கிராமசேவை உத்தியோகத்தருக்கு அவமானப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றுள்ளது. காரைதீவு எல்லைக்குள் உள்ள வயல்காணியில் சட்டவிரோதமாக தகரக்கொட்டகை அமைக்கப்படுவது தொடர்பாக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் கமநலஉத்தியோகத்தர் ஆகியோர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்கிணங்க அவர் அங்கு சென்றுள்ளார். அவருடன் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சசிக்குமாரும் சென்றுள்ளார். அவர்கள் அங்கு கொட்டகையை அவதானித்துக்கொண்டிருக்கையில் பொலிசாருக்கும் தவிசாளர் தகவல்கொடுக்க அவர்களும் வந்து சேர்;ந்தனர். அதுவரை கொட்டகை அமைத்த உதவிதவிசாளர் எ.எம்.யாகீர் அங்கு வரவில்லை.பொதுமக்களும் கூடினர். சிறிதுநேரத்தில் அங்குவந்த அவர் ஆக்ரோசமாக அங்கு நின்றவர்களுக்கு ஏசினார்.அங்கு பதட்டம் நிலவியது. இது பற்றி தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்: சட்டவிரோதமாக தகரக்கொட்டகை அமைக்கப்படுவது தொடர்பாக அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.கஜேந்திரன் மற்றும் கமநலஉத்தியோகத்தர் ஆகியோர் விடுத்த தொலைபேசி அழைப்பிற்கிணங்க நான் அங்கு சென்றேன். பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சசிக்குமாரும் வந்தார். சிறிதுநேரத்தில் அங்குவந்த காணிஉரிமையாளரும் பிரதேசசபை உபதவிசாளருமான யாகீர் ஆக்ரோசமாக அங்கு நின்றவர்களுக்கு ஏசினார். இங்கு கிராமசேவைஉத்தியோகத்தருக்கோ உறுப்பினருக்கோ தவிசாளருக்கோ எந்த அதிகாரமுமில்லை. எனது காணிக்குள் கால்வைத்தால் கொத்துவன் என்று மிரட்டினார். கிராமசேவையாளர் இனவாதி. உறுப்பினருக்கு இங்கு வேலையில்லை. செய்யிறதைச்செய்யுங்கள். மக்கள் தலைவனான என்னை பொலிசார் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதோடு எமது கடமையைச்செய்யவிடாம்தடுத்ததுடன் கொத்துவன் என்று அச்சுறுத்தல் விடுத்தமை குற்றமாகும். மற்றது கிராமசேவையாளரின் கடமைக்கு இடையுறு விழைவித்தார். எனவே நாம் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை பதிவுசெய்தோம். மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் இக்காணிஉரிமையாளருக்கெதிராக கமநலஉத்தியோத்தரால் போடப்பட்ட வழக்கை முன்நகர்வுமனுவை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்குதாக்கல் செய்தோம். அதன்படி (20.01.2021) வழக்கு எடுக்கப்பட்டது. நாம் மன்றிற்குச் சென்றிருந்தோம். நீதிவான் சகலவற்றையும் கேட்டுக்கொண்டதன்பிற்பாடு இவ்விவகாரத்தில் தலையிட பிரதேசசபைக்கு அதிகாரமுள்ளது. எனவே அவரை(காணி உரிமையாளரை) எதிர்வரும் 28ஆம் திகதி மன்றிற்கு ஆஜராக அழைப்பாணை விடுப்பதாகக்கூறினார். ( வி.ரி.சகாதேவராஜா) |
19.01.21- ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடித்து முன்மாதிரி இளைஞராகுங்கள்..
ஒழுக்கவிழுமியங்களைக் கடைப்பிடித்து முன்மாதிரி இளைஞராகுங்கள் இளைஞர்சம்மேளன அமைப்புக்கூட்டத்தில் தவிசாளர் ஜெயசிறில் ஆலோசனை.. சமுகத்தில் இளைஞர்கள் படித்தால் மட்டும் போதாது மாறாக ஒழுக்கவிழுமியங்களைக்கடைப்பிடித்து சிறந்தநல்லொழுக்கமுள்ள முன்மாதிரியான இளைஞராக மாறவேண்டும். இவ்வாறு காரைதீவுப்பிரதேசத்திற்கான இளைஞர்சம்மேளனம் அமைக்கும் கூட்டத்தில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஆலோசனைவழங்கினார். காரைதீவு இளைஞர்கழகங்களின் பிரதேசசம்மேளன புனரமைப்புக் கூட்டம் காரைதீவு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.பரீட் தலைமையில் பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எ.அஜித்குமார் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாறக்அலி உதவிபிரதேசசெயலாளர் எ.பார்த்தீபன் கௌரவஅதிதிகளாகக்கலந்து சிறப்பித்தனர். அங்கு தவிசாளர் ஜெயசிறில்மேலும் உரையாற்றுகையில்: இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம். உங்களது சக்தி மகத்தானது. நீங்கள் நினைத்தால் வியத்தகு சாதனைகளைச் புரியலாம். எமது பிரதேச வளங்களை இனங்கண்டு அதற்கேற்ப பலதிட்டங்களைத்தீட்டி அதனை நடைமுறைப்படுத்தி மதிப்பீடும் செய்யவேண்டும். அத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்றடைகின்றதா என்பதையும் கண்காணிக்கவேண்டும். எதற்கும் கலந்துரையாடல் அவசியம். அன்னை தெரேசா அண்ணல் மகாத்மாகாந்தி போன்ற சமுக முன்மாதிரிகளை நாம் பின்பற்றவேண்டும். அதற்கு நாம் சிறந்த ஒழுக்கசீலர்களாக திகழவேண்டும்.என்றார். கூட்டத்தில் புதிய பிரதேசசம்மேளன நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர். தலைவராக வி.சர்மிளகாந்தன் உபதலைவராக எஸ்.எம்.சம்ஸித் உபசெயலாளராக ஆர்.அபிஷேக் என்.தினேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ( வி.ரி.சகாதேவராஜா) |
18.01.21- நள்ளிரவில் சிசிரிவி கமரா உடைத்து பலசரக்குக்கடை கொள்ளை..
நள்ளிரவில் சிசிரிவி கமரா உடைத்து பலசரக்குக்கடை கொள்ளை காரைதீவில் சம்பவம்:தவிசாளர்விரைவு பொலிஸ்விசாரணைஆரம்பம்.. மழைபொழிந்துகொண்டிருந்த நள்ளிரவு வேளையில் சிசிரிவி கமராவை உடைத்து பசரக்குக்கடையொன்று கொள்ளையிடப்பட்டிருக்கின்றது இச்சம்பவம் காரைதீவில் இடம்பெற்றது. காரைதீவு பிரதானவீதியில் பொதுநூலகத்திற்கு முன்பாகவுள்ள பிரதேசசபைக்குச் சொந்தமான சந்தைக்கட்டடத்தில் அமைந்துள்ள பாரிய பலசரக்குக்கடையிலேயே இக்கொள்ளை துணிகரமாக நடந்தேறியுள்ளது. இக்கொள்ளை தொடர்பாக கடைஉரிமையாளர் சாமித்தம்பி தங்கராசா சம்மாந்துறைப் பொலிசாருக்கு அறிவித்ததுடன் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கும் அறிவித்தார். தவிசாளர் கி.ஜெயசிறில் ஸ்தலத்திற்குவிரைந்து பார்வையிட்டவேளைபொலிசாரும் வந்து விசாரணையைத் தொடங்கினர். கடையிலிருந்த தொலைபேசி அட்டைகள் சிகரட் பக்கட்டுகள் மற்றும் ஒருதொகை ரொக்கப்பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வாக்குமூலத்தில் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.சம்மாந்துறைப் பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். (வி.ரி.சகாதேவராஜா) |
16.01.21-இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் தேசிய நிகழ்வு..
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலினுடாக இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் தேசிய நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது. காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிப் பாடசாலையில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஐன் தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள் ஆகியோரும் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் அவர்களும் கலந்துகொண்டனர். இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழங்கமைப்பில் இட்ம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தின் தலைவர் எஸ். நந்தேஸ்வரன் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன் காரைதீவு நீர்வழங்கல்அதிகார சபையின் பொறுப்பதிகாரி வி.விஐயசாந்தன் காரையடி ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் எம். மயில்வாகனம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம் சித்தானைக்குட்டி ஆலய செயலாளர் எஸ். பாஸ்கரன் பொருளாளர் த.தவக்குமார் பிரதேச கலாசாரஉத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவலோஜினி மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்கள் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அறநெறி மாணவர்கள் புத்தாண்டுக்கான உறுதியுரை எடுத்ததுடன் அவர்களுக்கு அறநெறி அறிவுரைகள் வழங்கப்பட்டன. நீதிநூல்களும் வழங்கப்பட்டன. வி.ரி.சகாதேவராஜா |
1-10 of 4263