முன்பள்ளிநிர்வாகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றஒளிவிழாநிகழ்வு இன்று(15) பிற்பகல் 3.30 மணியளவில்,மகிழூர்முனைமெதடிஸ்த சில்வவெஸ்ட் மண்டபத்தில் முகாமை குரு அருட்செல்வி.ஜோதினிசீனித்தம்பிஅவர்களின் தலைமையில் வெகுசிறப்பாகநடைபெற்றது. இந்நிகழ்வில் வணக்கத்துக்குரியசகோதரர் பரமானந்தன்,அல்பேட் சீவரெத்தினம்,மகிழூர் கிழக்குகிராமஉத்தியோகத்தர் இ.மதிதரன், மகிழூர்முனைகிராமநிலதாரிஎஸ்.உதயகுமார் போன்றோர் அதிதிகளாககலந்துகொண்டனர். முன்பள்ளிமாணவிபீ.றேச்சில் நிம்சியின் வரவேற்புநடனத்துடன் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.அதனைத் தொடர்ந்து இயேசுகிறிஸ்துவின் தேவமகிமையையும் இறையாட்சியையும் வெளிப்படுத்தும் கரோல் இன்னிசைகீதங்களும், நடனம், கதை, பேச்சு,கோலாட்டம்,கவிதைபோன்றகலைநிகழ்வுகள் முன்பள்ளிமற்றும் ஞாயிறுபாடசாலைமாணவர்களால் அளிக்கைசெய்யப்பட்டன. முகாமை குரு அருட்செல்வி.ஜோதினிசீனித்தம்பிஅவர்களால்திருவிவிலியத்தின் இறைசெய்திஅருளப்பட்டது. அதிதியாககலந்துகொண்டஅல்பேட் சீவரெத்தினம் தனதுஉரையில் இச்சிறுவர்களைப் போலநாம் அனைவரும் எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் தீயசிந்தனைகளைகளைந்துஒற்றுமையாகபழகுவதுடன் உயிர்களிடத்திலும்அ ன்பு செலுத்துபவர்களாக இருக்கவேண்டுமெனவும்எமதுபாவத்தில் இருந்தஎம்மைமீட்டுதேவனுடன் ஒப்புரவாக்கவே இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்குவந்தார் எனவும் பாவத்தின் பிரதிபலனானமரணத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் எம்மைமீட்டுசுகம்,சமாதானம்,நித்திய ஜீவன் என்பவற்றை எமக்குஅளிப்பதற்காகவேவந்துள்ளார் என்றும் சுமார் 2000 வருடங்களுக்குமுன்பதாகபெத்லகேம் எனும் சிறியஊரில் இடம்பெற்றகிறிஸ்து இயேசுவின் பிறப்பானதுமானிடவரலாற்றின் ஒருதிருப்புமுனையாக இருந்துள்ளதுஎன்றுகுறிப்பிட்டார். நிகழ்வின் இறுதியாககலைநிகழ்ச்சிகளில் பங்குகொண்டமுன்பள்ளிபாடசாலைமாணவர்களுக்குஅதிதிகள்மற்றும்நத்தார் பாப்பாவினாலும் பரிசுப்பொருட்கள்வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் பாடசாலைமுன்பள்ளிமற்றும் ஞாயிறுபாடசாலைமாணவர்கள்,சிறுவர்கள்,பாடசாலைமாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலைஅதிபர் ஆசிரியர்கள்,கிராமஅபிவிருத்திச் சங்கதலைவர்உ றுப்பினர்கள், ஆலயதலைவர்கள்விளையாட்டு அமைப்புகள், சமூகஆர்வலர்கள் ,ஊடகவியலாளர்கள் சமூகநலன்விரும்பிகள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன்போதுகலந்துகொண்டனர். துறையூர் தாஸன் |
அறிவியல் >