16.12.16- தேசிய உற்பத்தித் திறன் தேர்வுகளில் நான்காவது தடவையாகவும் உள்நுழைந்தகளுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை..

posted Dec 15, 2016, 5:18 PM by Habithas Nadaraja   [ updated Dec 15, 2016, 5:44 PM ]
இலங்கையிலுள்ளஅரச,அரசசார்பற்றநிறுவனங்கள் மற்றும்மாகாண அமைச்சுக்களிடையே உள்ளபாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதாரசேவைநிலையங்கள்,தொழிற்சாலைபோன்றவற்றில் நடாத்தப்பட்டதேசியஉற்பத்தித் திறன் தேர்வுகளில் தெரிவுசெய்யப்பட்ட நிலையங்களுக்கானஉற்பத்தித் திறன் ஊக்குவிப்புவிருதுவழங்கும் நிகழ்வு இரத்மலானை ஸ்ரீபன் ஸ்டூடியோ இல் பெரும் பிரமாண்டகலைநிகழ்ச்சிகளுடன் கூடியதாக இன்று(14) நடைபெற்றது.

உற்பத்தித் திறனில் மேன்மையுற்றுசிறந்தசேவையைமக்களுக்குவழங்கும் அரசமற்றும் தனியார் நிறுவனங்களுக்கான போட்டிகளைபொதுநிர்வாகஅமைச்சுஆண்டுதோறும் தேசியரீதியில்நடாத்திவருகின்றது.பொதுநிர்வாகஅமைச்சுநிறுவனங்களுக்குவிஜயம் செய்துநிறுவனத்தின்சேவைகளின் தரம்,செயற்பாடுகளின் வினைத்திறன், முகாமைத்துவம், மேம்படுத்தல், தலைமைத்துவம், பாவனையாளர்திருப்தி,பாதுகாப்புபோன்றபல்வேறுவிடயங்களைபரீட்சித்துநிறுவனங்களைதரப்படுத்துகின்றது.

ந்தவகையில் கடந்த மூன்றுவருடங்களாகதேசியஉற்பத்தித் திறன் போட்டியில் தடம் பதித்து வெற்றியீட்டிய களுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை இம்முறையும் தேசியரீதியில் இரண்டாம் இடத்தினைதட்டிக்கொண்டுள்ளது.நேற்றையதினம் விருதுவழங்கல் நிகழ்வின்போது இவ்வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவ் விருதினைவைத்தியசாலையின் சார்பாகதனதாக்கிக்கொண்டார்.

தேசியஉற்பத்தித் திறன் தேர்வுகளில் முதலாவதுதடவைதரவட்டதேர்வில் விசேடவிருதினையும் இரண்டாவதுதடவைதேசியரீதியில் மூன்றாம் இடத்தினையும் மூன்றாவதுதடவைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று இம்முறை(2015)தேசியரீதியில் இரண்டாம் இடத்தினைதட்டிக்கொண்டுள்ளதுஎன்றால் மிகையாகாது.

கௌரவஅதிமேதகுசனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களுடன் ஆரம்பமானஇந்நிகழ்வில் பொதுநிர்வாகஅமைச்சர் மத்துகமபண்டார,கௌரவஅமைச்சர்களானநிமல் சிறிபால டீசில்வா, ஏ.எச்.எம்.பௌசி, கிழக்குமாகாணதவிசாளர்ஆரியவதிகலப்பதி, அலுவலகசெயலாளர்கள்,நிறுவனபணிப்பாளர்கள் எனபெருந்தொகையானவர்களுடன் நூற்றுக்கணக்கானநிறுவனங்களும் பங்குபற்றியிருந்தனமட்டக்களப்புமாவட்டத்தில் கடந்தசிலவருடங்களாகமக்களின் வைத்தியச் சேவையில் தடம்பதித்து வருகின்ற களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலைஇம்முறைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினை சுவீகரித்துக்கொண்டது வைத்தியசாலை நிர்வாகதலைமைத்துவத்திற்கும் வைத்தியசாலைசமூகத்துக்கும் பெருமையைஅளிக்கின்றதுஎன்றால் மிகையாகாது.

துறையூர் தாஸன்

























Comments