பிறசெய்திகள்

13.12.16- நாங்கள் விட்டில்கள் அல்ல நூல் அறிமுக நிகழ்வு..

posted Dec 13, 2016, 2:04 AM by Habithas Nadaraja   [ updated Dec 13, 2016, 9:54 AM by Web Team ]

பௌர்ணமிகலைநிகழ்வுத் தொடர் -23ஐ சிறப்பிக்கும் வகையில் மட்டுமாநகரசபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்தும் கவிஞர் ஜி.எம்.பரஞ்சோதியின் நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூல் அறிமுகநிகழ்வு இன்று(13) மாலை 4.00 

மணிக்கு மட்டு பொது நூலக கேட்போர்கூடத்தில் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில்மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் பிரதம அதிதியாகவும் மட்டுமாநகர ஆணையாளர் மா.உதயகுமார் முன்னிலைஅதிதியாகவும் தோழர் ஆர்.ராஜேந்திரா சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளார்

நாங்கள் விட்டில்கள் அல்லஎனும் கவிதை நூலுக்கானவெளியீட்டுரையினை,பிரபலஆய்வாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் அவர்களும் நயவுரையினைபதிப்பகதிணைக்களமுன்னாள் பணிப்பாளர் ஆகவே– ஜபார் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கானநிகழ்ச்சித் தொகுப்பினைகவிஞர் கதிரவன் த.இன்பராசாவும் வரவேற்புரையினைமகுடம் வி.மைக்கல் கொலினும் நன்றியுரையினைகவிஞர் தில்லைநாதன் பவித்திரனும்நிகழ்த்தவுள்ளதுடன் மட்டக்களப்புதேசியசேமிப்புவங்கிமுகாமையாளர் எஸ்.வீ.சுவேந்திரன் ,நூலின் முதல் பிரதிபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,மற்றும் சமூகஆர்வலர்களைகலந்துகொள்ளுமாறுநிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர். 

துறையூர் தாஸன்





13.12.16- சபா நகர் பாலர் பாடசாலைக்கான நீர் வழங்கும் நிகழ்வு..

posted Dec 13, 2016, 1:39 AM by Habithas Nadaraja

கோடை காலங்களில் மக்கள் நீருக்காக அவதி உறும் ஒரு பிரதேசமாக சபா நகர் பிரதேசத்தை குறிப்பிடலாம். அங்கே அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கு சிறார்களின் நலன் கருதி, தண்ணீர் வசதி செய்து தருவதாக வாக்களித்திருந்தோம், அதற்கமைய அந்தப்பணி நிறைவு செய்யப்பட்டு  சிறார்களின் பயனுக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார மற்றும்  சபிர் மன்சூர் பவுண்டேசனின் திவரும்போல கிளையின் தலைவர் ஷபீக், மொஹம்மட் உட்பட முழு அணியினரும், அத்தோடு போஷகர் ஷாம் மௌலானா, நண்பன் நிஸ்வர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Afham N Shafeek








13.12.16- உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா..

posted Dec 12, 2016, 5:34 PM by Habithas Nadaraja

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற இராஜாங்க ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிகழ்வில் ஆய்வுக் கோவை , சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

(அஸீம் கிலாப்தீன்)




13.12.16- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய 350 பொதிகளை முஸ்லிம் எய்ட் வழங்கியது..

posted Dec 12, 2016, 5:32 PM by Habithas Nadaraja

கொடிகாவத்த ரோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்கள் மற்றும் கொட்டிகாவத்த பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆனால் வௌ;வேறு பாடசாலைகளில் கல்வி பயலும் மாணவர்கள் 9ம் திகதி அன்று சப்பாத்து, புத்தகப் பை மற்றும் கற்கை உபகரணங்கள் அடங்கிய 350 பொதிகளை முஸ்லிம் எய்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டனர். 

இந் நிகழ்வு கொட்டிகாவத்த ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதில் பௌத்த, கிறித்தவ, இஸ்லாமிய சமயத் தலைவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

இதேபோன்று, கடந்த மாதம் பாடசாலைக்குச் செல்ல அவசியமான பொருட்கள் அடங்கிய 500 பொதிகளை தெமடகொட விபுலாந்தா கல்லூரி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இதர பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

களனி கங்கைப் பெருக்கெடுப்பினால் ஏற்பட்ட பாரிய வெள்ள 
அனர்த்தம் காரணமாக கடந்த ஜுலை மாதம் பாதிக்கப்பட்ட பல்வேறு சமூகப் பிரிவினருக்கு முஸ்லிம் எய்ட்  வாழ்வாதாரம், தொழில்களுக்கு மீளத் திரும்புவதற்கான உபகரணத் தொகுதிகளை பல்வேறு நன்கொடை அமைப்புகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. 

வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் பாரபட்சமின்றி முஸ்லிம் எய்ட் ஊடாக அனர்த்த நிவாரண சேவைகளைப் பெற்று வருகின்றனர். 

(அஸீம் கிலாப்தீன்)





13.12.16- மலையக மக்கள் தொடர்பில் அனுரகுமாரவை பாராட்டுவோம்; வரலாற்றையும் மறக்காதிருப்போம் - கூட்டணி தலைவர் மனோ கணேசன்

posted Dec 12, 2016, 5:27 PM by Habithas Nadaraja   [ updated Dec 13, 2016, 10:06 AM by Web Team ]


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ் பொது நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு  என்பவை மலையக தமிழரின் இருப்பையே இந்நாட்டில் அசைத்து விட்டன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஐதேக மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென நண்பர் அனுர கூறியிருப்பது நியாயமானதுதான்.

இந்த வரலாற்று தவறுகளுக்காகவும், இன்னும் பல இனவாத நடவடிக்கைகளுக்காகவும், இன்னமும் பல்வேறு சிங்கள, தமிழ் முஸ்லிம் கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டிய சூழல் மெதுவாக உருவாகி வருகிறது. இந்த வரலாற்று தவறுகள் மன்னிப்பு பட்டியலில் ஜேவிபிக்கும் காத்திரமான இடமிருக்கிறது என்பதை நண்பர்  அனுர புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
எனவே மலையக மக்கள் சார்பில் தோழர் அனுரகுமாரவை இன்று பாராட்டி இனிதே வரவேற்போம். அதேவேளை வரலாற்றையும் மறக்காதிருப்போம் என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
மலையக மக்கள் குறிப்பாக தோட்டத்தொழிலாளர் இந்நாட்டில் "தமிழர்" என்ற இன அடையாளம் காரணமாகவே பிரதானமாக ஒடுக்கப்படுகிறார்கள். இந்நாட்டில் ஈழத்தமிழர், மலையகத்தமிழர் மற்றும் முஸ்லிம் மக்கள் என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களே ஒடுக்கப்படுவதற்கான பேரினவாத சூழலை ஏற்படுத்துவதில் எல்லா பிரதான பெரும்பான்மை இன கட்சிகளும் வரலாறு முழுக்க பங்களித்துள்ளன. இதில் ஐதேக, ஸ்ரீலசுக ஆகியவற்றுடன் ஜேவிபிக்கும் பாரிய பங்கு இருக்கின்றது. எனவே தமிழரிடம் "மன்னிப்பு" கேட்க வேண்டுமென்றால் இந்த மூன்று கட்சிகளுமே கேட்க வேண்டும்.

குறிப்பாக "தொழிலாளர் ஆட்சியை அமைப்போம்" என்று அறைகூவல் விடுத்த, "புரட்சிக்கர" ஜேவிபியின் உருவாக்கத்தின் போது நடந்து என்ன? உழைக்கும் மலையக பாட்டாளி மக்களை, "இந்திய ஏகாதிபத்திய விஸ்த்தரிப்புவாத முகவர்கள்" என அடையாளமிட்டு, கட்சி அங்கத்தவர்களுக்கு அரசியல் வகுப்பே நடத்தி சிங்கள இளைஞர் மத்தியில் மலையக மக்களுக்கு எதிராக இனவாத நஞ்சு தூவப்பட்டு, இனவாத அடிப்படை ஏற்பட காரணமாக அமைந்த கட்சிதான், ஜேவிபி. இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல.

தோழர் ரோஹன விஜேவீரவின் இந்த வழிகாட்டலில் உருவாகிய, அன்றைய ஜேவிபி "இளைஞர்கள்" தான் இன்று, நண்பர் விமல் வீரவன்ச உட்பட, பல்வேறு கட்சிகளில் இருந்துக்கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை முன்வைக்கின்றார்கள். ஹெல உறுமய செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் அத்தகைய ஒரு முன்னாள் ஜேவிபியாளர்தான். இவர்கள் இன்று இலங்கை அரசியல் பரப்பில் ஆற்றிவரும் அரசியல் பங்களிப்புகளை நாம் சரியாக அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்.

எனவே இன்றைய ஜேவிபி தலைவரின் நிலைப்பாடுகளை வாழ்த்தி வரவேற்கும் அதேவேளை வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது. வரலாற்றை ஆய்ந்தறிந்து பாடங்களை கற்க மறந்த முட்டாள்களாகி விடக்கூடாது. எம்மினத்தை வாழ்முழுக்க அடித்து படுகாயப்படுத்தி, குற்றம் புரிந்துவிட்டு, கடைசியில் அதே குற்றவாளி எம்மை பார்த்து சும்மா சுகம் விசாரிப்பதை கண்டு,  உணர்சிவசப்பட்டு, புளங்காகிதமடைந்து, மயிர்கூச்செறிந்து, தடுமாறும் "பாமர" அரசியலில் நாம் மறந்தும் மூழ்கி காணாமல் போய்விட முடியாது. நாங்கள் சிரித்து பேசுகிறோம் என்பதற்காக அவர்களும் அவர்களது அடிப்படை விடயங்களில் நிலைத்தடுமாறுவது இல்லையே. எனவே நாங்கள் மட்டும் அவசரப்பட தேவையில்லை. ஆகவே தோழர் அனுரகுமாரவை இன்று பாராட்டி இனிதே வரவேற்போம். வரலாற்றையும் மறக்காதிருப்போம்.


12.12.16- யாழ். நல்லூரில் இடம்பெற்ற பாரதி விழா..

posted Dec 11, 2016, 6:54 PM by Unknown user

யாழ். இந்தியத் துணைத்தூதரகம் அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்றத்துடன் இணைந்து முன்னெடுத்த பாரதிவிழா பாரதியரின் பிறந்ததினமாகிய 11.12.2016 மாலை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை அகில இலங்கை அமுதசுரபிக் கலாமன்ற அமைப்பாளரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி ஆற்றினார். 

தமிழகத்தின் முன்னணிப் பேச்சாளர் நெல்லைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் சிறப்புரையாளருக்கான அறிமுகவுரையை ஆற்றினார்.  அமுதசுரபிக் கலாமன்ற உறுப்பினரும் வங்கி உத்தியோகத்தருமாகிய சி.சசீவன் நன்றியுரை ஆற்றினார்.

யாழ் முன்னணி இசைக்கலைஞர்கள் இணைந்து வழங்கிய  பாரதி பாடல்கள் இசைவிருந்தும் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த இசைநிகழ்ச்சியில் சிவஸ்ரீ. விஸ்வ பிரசன்னா குருக்கள் (நல்லூர்), சிவஸ்ரீ. கு.விஸ்வசுந்தர், ஈழத்து இளைய சௌந்தரராஜன் இ.அருள்ஜோதி, ஸ்ரீ.சுலக்ஷன், ம.தயாபரன், தி.மேரி நவரத்தினம், நாதன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாரதி; பாடல்களை இசைத்தனர். ஆசிரியர் ஜேம்ஸ் அன்ரன் கீபோர்ட் இசையையும் ந.பிரேமானந்த் ஒக்ரோ பாட் இசையையும் கபிலன் தபேலா இசையையும் இ.இராஜேஸ்வரன் பேஸ்கிற்றார் இசையையும் வழங்கினர். 

ஒரு மணி நேரம் இடம்பெறவேண்டிய  சிறப்புரை நிகழ்வு ஒன்றேகால் மணிநேரத்தையும் கடந்து சென்றபோது தூதரக உத்தியோகத்தர் பேச்சாளருக்கு அருகில் சென்று நேரத்தைச் சுட்டிக் காட்டினார். இதனால் அசௌகரியமுற்ற பேச்சாளர் சடுதியாக நன்றி வணக்கம் எனக்கூறிப் பேச்சை முடித்துக் கொண்டார். பேச்சாளர்கள் சபை அறிந்து பேசவேண்டுமென சபையில் உள்ள பெரியவர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டமையை அவதானிக்க முடிந்தது. 

இசைநிகழ்வில் பங்கேற்ற கலைஞர்கள் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றும் பொன்னாடை மற்றும் பொன்முடிப்பு வழங்கப்பட்டுக் கௌரவப்படுத்தப்பட்டனர். 

நிகழ்வின் தொடக்கமாக பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூரில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 












யாழ். நல்லூரில் இடம்பெற்ற பாரதி விழா..


மேலதிக படங்களுக்கு





12.12.16- “சமூக ஒற்றுமைக்கு உறுதிபூணுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்..

posted Dec 11, 2016, 6:09 PM by Habithas Nadaraja

“ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என நபியவர்கள் வலியுறுத்தி - போதித்த விடயம் காலத்தின் தேவைக் கருதி இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ இத்திருநாளில் உறுதிபூணவேண்டும் எனவும் அதற்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

அவர் விடுத்துள்ள மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு நல்வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்துலில்லாஹ். அகிலத்திற்கு அருட்கொடையாக அவதரித்த அண்ணல் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அவர்களின் வாழ்க்கை வழி முறைகளையும் போதனைகளையும் தம் வாழ்வில் பின்பற்றுவதற்கு இந்நாளில் உறுதிபூண வேண்டும். 

அதற்கமைய, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழல் முஸ்லிம்கள் கட்சி, பிரதேச வேறுபாடுகளை மறந்து ஒன்றினைந்து செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது. இதனை ஒவ்வொரு முஸ்லிமும் உணரவேண்டும். 
சமாதானம், நல்லிணக்கம், கருணை, சுயநலமின்மை, பரஸ்பரப் புரிந்துணர்வு, சகோதரத்துவம், நீதி மற்றும் நேர்மை என பல உயர் விழுமியங்களை நபி அவர்கள் போதித்துள்ளார்கள். இந்தப் போதனைகளுக்கேற்ப தமது வாழ்க்கையை மீளமைத்துக்கொள்வதற்கு மீலாதுன்நபி விழா முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும்.

நபியவர்களது போதனைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது சகல இனமக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டுபவையாகும்.  –என்றார். 



12.12.16- மீலா – துன் - நபி விழாவை முன்னிட்டு கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்களின் வாழ்த்துச் செய்தி.

posted Dec 11, 2016, 6:08 PM by Habithas Nadaraja

.முஸ்லிம்களின் முக்கிய தினங்களில் ஒன்றான முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூறும் மீலா – துன் - நபி விழாவை முன்னிட்டு இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

முஸ்லிம்களின் நாட்காட்டியில் மீலா – துன் - நபி தினமானது மிக முக்கிய இடம் வகிக்கின்றது. இன்றைய தினத்தில் அமைந்துள்ள உத்தம நபிகள் முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை உலகவாழ் முஸ்லிம்கள் வெகு விமரிசையாக நினைவுகூர்ந்து வருகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்போதனைகளில் அனைத்தின மக்களிடையேயும் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதன் முக்கியத்துவம் பற்றியவை மிக முக்கியமானவையாகும். அன்னாரது வாழ்க்கை முறையானது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டதுடன், கருணை, இரக்கம், பொறுமை மற்றும் சமத்துவம் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், தாம் போதித்த எளிமையான வாழ்க்கை முறை பற்றிய எண்ணக்கருவை தமது செயல்முறை வாழ்விலும் செய்து காட்டினார். ஒரு சமூகத்தில் காணப்பட வேண்டிய உண்மைத் தன்மை மற்றும் நியாயத் தன்மை என்பவற்றின் பெறுமதி பற்றி வலியறுத்தி, ஒழுக்கமிக்க சமூகமொன்றினைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றி புனித நபிகளாரின் போதனைகள் அமைந்துள்ளன. 

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதில் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். எனவே இலங்கைவாழ் மக்களாகிய நாம் அனைவரும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு அழகான தேசத்தைக் கட்டியெழுப்பும் இம்முயற்சியில் அன்னாரது போதனைகளை எமது வாழ்க்கையிலும்; எடுத்து நடப்பதற்கு வாய்ப்புக்கிட்ட வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன். 

மீலா – துன் - நபி விழாவை கொண்டாடும் எமது சகோதர முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


இரா. சம்பந்தன்
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்       


    
 

12.12.16- மீண்டும் யாழில் இளைஞர்களின் எழுச்சி..

posted Dec 11, 2016, 6:03 PM by Habithas Nadaraja

கடந்த புரட்டாதி மாதம் யாழில் பாரதியாரின் நினைவு தினம் வித்தியாசமான முறையில் இளைஞர்களால் அனுஷ்டிக்கப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே; 
 
யாரும் எதிர்பார்க்காத வகையில் இளைஞர்களால் மீண்டும்     நல்லூரில் அமைந்துள்ள பாரதியார் சிலையானது வர்ணத் தீந்தைகளால் எழில் ஊட்டப்பட்டு புதுமை கவியின் பிறந்த தினத்தை(11.12.2016) கொண்டாடும் விதமாக மலர்மாலை அணிவிக்கப்பட்டு  இழந்த இயற்கையை அரவணைக்கும் வகையில் நிகழ்வில் பங்கு கொண்டவர்களுக்கும் பொது மக்களுக்கும் பசு மரகன்றுகள் வழங்கப்பட்டமை அனைவரையும் கவர்ந்திருந்தது குறிப்பிடதக்கது.

இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான இளைஞர்களின் செயற்பாடுகளை வரவேற்கவேண்டியது எமது சமூக பொறுப்பாகும்.

இளைஞர்கள் அனைவருக்கும் எமது இணையம் சார்பாக நல்வாழ்த்துக்கள்!

 ஐ.சிவசாந்தன் 
























11.12.16- துறைநீலாவணைபொது நூலகவளாகம் கால்நடைகளின் உறைவிடமாக மாறியுள்ளது..

posted Dec 11, 2016, 8:44 AM by Habithas Nadaraja   [ updated Dec 11, 2016, 10:23 AM ]

மண்முனைதென் எருவில் பற்றுபிரதேசசபைக்குட்பட்ட,துறைநீலாவணை 05 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள பொதுநூலகத்துக்கு சுற்றுமதில் அமைப்பதற்குஆயத்தமாக இருந்தபணத்தைகளுதாவளைபிரதேச சபை வேறுஒருதிட்டத்திற்குமாற்றியுள்ளது.
நீண்டகாலமாகசுற்றுமதில் இல்லாததன் காரணமாகமாரிகாலஇரவுவேளைகளில்; கால்நடைகள் ,பொது நூலகத்தைமற்றும் பொதுநூலகவளாகத்தைதங்களதுஉறைவிடமாகபயன்படுத்திஅசுத்தம் செய்துவருவதாகவாசகர்களும்,பொதுமக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

துறைநீலாவணை 05 ஆம் வட்டாரகிராமஅபிவிருத்திச் சங்கத்தினரும்பொதுமக்களும் ,வெகுவிரைவில் பொது நூலகத்துக்குசுற்றுமதில் அமைத்துத் தருமாறுசம்பந்தப்பட்டஉரியஅதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கின்றனர்.

துறையூர் தாஸன்








1-10 of 4855