பிறசெய்திகள்
23.01.21- தமிழ்மக்களின் இருப்பை கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி கல்முனை கார்ப்பட்வீதியை உடனடியாகநிறுத்துங்கள்..
தமிழ்மக்களின் இருப்பை கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி கல்முனை கார்ப்பட்வீதியை உடனடியாகநிறுத்துங்கள்! ஜனாதிபதியிடம் கல்முனை சங்கரத்னதேரர்உறுப்பினர் ராஜன் வேண்டுகோள்.. நகரஅபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் இருப்பைக் கபளீகரம் செய்யும் மாவடிப்பள்ளி - கல்முனை கார்ப்பட் வீதியை உடனடியாக நிறுத்தவேண்டும். இவ்வாறு கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபையின் த.தே.கூ. உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர். கல்முனை ஊடகமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர்கள் பகிரங்கமாக இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர். அங்கு உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்: கடந்த 25வருடங்களாக கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் ஜீவாதாரமான வயல்காணிகளை கபளீகரம் செய்து இருப்பை இல்லாதொழிக்கும் இவ்வீதியை அமைக்க ஹரீஸ் போன்ற இனவாதிகள் ஒற்றைக்காலில் நின்றனர். கல்முனையில் 40ஆயிரம் தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றபோதிலும் அவர்களிடம் எதுவுமே கலந்துரையாடாமல் பேசாமல் இச்சதித்திட்டத்தை அரங்கேற்ற முனைந்தனர். ஆனால் தமிழுணர்வுள்ள எம்மவரின் எதிர்ப்புக் காரணமாக அவர்கள் அதை கைவிட நேர்ந்தது. தற்போது இனவாதி அதாவுல்லாஹ் கல்முனையில் கால்ஊன்றும் நோக்கில் வேறொரு போர்வையில் ஹரீஸ் எம்.பியுடன் சேர்ந்து அதேதிட்டத்தை ஜனாதிபதியைப்பிடித்துக்கொண்டு அமுல்படுத்தமுற்பட்டுள்ளார். ஜனாதிபதியின் 1லட்சம் கிலோமீற்றர் கார்ப்பட் வீதியமைக்கும் திட்டத்தின் கீழ் 5கிலோமீற்றர் நீளமான இவ்வீதியை போடுவதற்கு வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் தற்போது அளக்கும்வேலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணம் என்னிடம் உள்ளது. இந்தக்கணம்வரை இதுபற்றி இங்குவாழும் எந்தத்தமிழருக்கும் தெரியாது. பாருங்கள் எவ்வாறு எம்மீது மேலும் மேலும் சவாரி செய்யப்புறப்படுகிறார். அதாவுல்லாவை எச்சரிக்கின்றோம்.முடிந்தால் இவ்வீதியை போட்டுப்பாருங்கள். வீதி அபிவிருத்தி செய்யவேண்டுமென்றால் கல்முனை தமிழ்ப்பிரதேசவீதிகளை வந்து பாருங்கள். காலாகாலமாக திட்டமிட்டு பாரபட்சம் காட்டி புறக்கணிக்கப்பட்ட பல வீதிகளுள்ளன. அவற்றைப்புனரமையுங்கள். மாவடிப்பள்ளிப்பிரதேசம் காரைதீவுப்பிரதேசசபைக்குள் வருகின்றது. ஆனால் இவ்வீதியமைப்பு தொடர்பாக அந்த காரைதீவு பிரதேச செயலாளருக்கோ பிரதேசசபைத் தவிசாளருக்கோ தெரியப்படுத்தாமல் தன்னிச்சையாக கள்ளக்களவாக முன்னெடுக்கிறார்கள். இதுவிடயத்தில் கல்முனை மேயரும் தலையிடவேண்டும். இந்த இடத்தில் பகிரங்கமாக அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் இனவாதமற்ற முஸ்லிம் சிங்கள அரசியல்வாதிகளையும் ஒன்றுசேர்ந்து இச்சதியை முறியடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். 1லட்சம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு! ஜனாதிபதியின் 1லட்சம் வேலைவாய்ப்புத்திட்டம் ஏழைஎளிய மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இதனை இனவிகிதாசார அடிப்படையில் வழங்கவேண்டும். ஆனால் இங்கு கல்முனையில் இதற்கான நேர்முகப்பரீட்சைக்கு சமுகமளித்தோர் சும்மாயிருக்க வேறுயாருக்கோவெல்லாம் வழங்கப்படுகிறது. ஆளும் அரசியல்பிரமுகர்கள் சிலர் கையூட்டல்கள் பெற்றமைபற்றியும் அறியக்கிடைக்கிறது. இங்குள்ள முக்கியதகவல். இந்த மாநகரில் ஆக இரண்டு தமிழர்க்கு மட்டுமே இத்தொழில் கிடைத்துள்ளது. இதேநிலைவரம் எல்லா தமிழர்பிரதேசங்களிலும் இடம்பெற்றுள்ளது. காரைதீவில் இம்முறை கிடைத்த 10தொழிலும் முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஒரு தமிழருக்கும் வழங்கப்படவில்லை. அதிகாரிகளும் இதனை வெளியில் கூறுகிறார்களில்லை. இது ஏழைத்தமிழ்மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகவே பார்க்கிறேன். இது ஜனாதிபதிக்குத் தெரியாமலிருக்கலாம். எனவேதான் இங்கு ஊடகங்களிலல் பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன். உடனடியாக இதற்கு நீதி வழங்கவேண்டும். என்றார். வண.சங்கரத்ன தேரர் கூறுகையில்: கிழக்குமாகாணசபைத் தேர்தல் தாமதமின்றி நடாத்தப்படவேண்டும்.சில இனவாதிகள் இதனைக்குழப்ப முயற்சிக்கின்றனர். தேர்தலை நடாத்தி அந்தந்த பிரதிநிதிகளிடம் அபிவிருத்திவேலைகளை ஒப்படையுங்கள். கிழக்கில் பின்தங்கிய தமிழர் பிரதேசங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. தொழில்வாய்ப்பிலும் புறக்கணிப்பு.ஆளுநருக்கு இது தெரியாது. ஜனாதிபதி அண்மையில் அம்பாறைக்கு வந்தார். ஆனால் எமக்கோ தமிழ்பிரதிநிதிகளுக்கோ எந்த அழைப்பும் விடுக்கவில்லை. இனமதசார்பற்று நாட்டின் தலைவர் நடக்கவேண்டும். கல்முனைக்கு வந்து பாருங்கள். இங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் நிலைமை பற்றி அறியுங்கள். கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று நானும் உண்ணாவிரதமிருந்தேன். அண்மையில் கணக்காளர் வந்துபோனார். அதற்குள் இனவாதி தலையிட்டு நிறுத்தியுள்ளனர். நான் அரசஅதிபரிடம் பேசியுள்ளேன். ஜனாதிபதியைச் சந்தித்து இங்குள்ள அத்தனை பிரச்சினைகளையும் விலாவாரியாக எடுத்துரைக்கவுள்ளேன் என்றார். ( வி.ரி.சகாதேவராஜா) |
23.01.21- சேனைக்குடியிருப்பில் இரண்டு நாட்காட்டிகள் வெளியிட்டுவைப்பு..
பெரியநீலாவணை ஆலையடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் பெரியகல்லாறு ஸ்ரீ பொட்டுப்பிள்ளையார் ஆலயம் சேனைக்குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயம் பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் சித்தாண்டி ஸ்ரீமுருகன் ஆலயங்களின் பிரதமகுரு சிவ ஸ்ரீ விஜயவர்மன் குருக்கள் இவ்வாண்டுக்குரிய நாட்காட்டியை வெளியிட்டுவைத்தார். சேனைக்குடியிருப்பு ஸ்ரீ. சித்திவிநாயகர் ஆலயத்தில் இவ்வெளியீட்டு விழா சுகாதார நடைமுறைப்படி நடைபெற்றது. அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியும் கலந்து சிறப்பித்தார். விஜயவர்மன் குருக்களின் தாய் தந்தை நினைவாக அமரா சிவ ஸ்ரீ ச.தனபாலசிங்கம் ஸ்ரீமதி செல்வராணி அம்மா ஆகியோரின் ஞாபகார்த்தமாகவும் மற்றும் அவரது மாமா மாமியாகிய அமரர் சோதிடர் விநாயகர் பூஜா துரந்தரர் சிவஸ்ரீ கா.நீதிநாதக்குருக்கள் அமரர் ஸ்ரீமதி நீ றுக்மணிதேவி தேவி ஆகியோரின் நினைவாக இரண்டு நாட்காட்டிகள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் சிவஸ்ரீ அகிலவர்மன் குருக்கள் சிவஸ்ரீ கிருஷ்ணஜெகேந்திரன் குருக்கள் சிவஸ்ரீ குகிலேஸ்வரக்குருக்கள் மற்றும் ஆலயபரிபாலன சபை ஆகியோர் கலந்து கொண்டனர். வி.ரி.சகாதேவராஜா |
23.01.21- சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் திலகசிறி கல்முனை விஜயம்..
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி நேற்று கல்முனைக்கு விஜயம் செய்தார். அவர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாண்டிருப்பில் அமைந்துள்ள கல்முனை வடக்கு -மேற்கு சமுர்த்தி வங்கிக்கு விஜயம் செய்தார். அவருடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வே.ஜெகதீசனும் வருகைதந்திருந்தார். அம்பாறை மாவட்டத்தில் முதல்தடவையாக கணனி மயப்படுத்தப்பட்ட வங்கிச்சேவையில் கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கியும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வங்கி ஊழியர்களை ஊக்கப்படுத்தும்வகையிலும் மேற்பார்வையிடும் வகையிலும் ஆணையாளரின் விஜயம் அமைந்திருந்ததுடன் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் வானொலிச்சேவையை வங்கியில் ஒலிபரப்புவதற்கான இலத்திரனியல் உபகரணம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்; வங்கியின் கணினிச்சேவையில் சிறப்பாக பங்களிப்பு செய்த தகவல் தொழில்நுட்ப பரிவு உத்தியோகத்தர் ரி.பவளேந்திரனும் பாராட்டப்பட்டார். இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் கே.இதயராஜா கல்முனை வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.தவசீலன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ரி.தெய்வேந்திரன் மற்றும் சமுர்த்தி வங்கியின் உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர். வி.ரி.சகாதேவராஜா |
23.01.21- கிழக்கில் கொரோனாத்தொற்று போட்டிபோட்டு பரவுகிறது..
கிழக்கில் கொரோனாத்தொற்று போட்டிபோட்டு பரவுகிறது கிழக்கில் 2115: கல்முனை1090:மட்டக்களப்பு532:திருமலை371:அம்பாறை99. கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று போட்டிபோட்டு பரவிவருகிறது. கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை 2100ஜ தாண்டியுள்ளது.அங்கு (22)வெள்ளிக்கிழமை 2115 ஆகியது. அதேவேளை கல்முனைப்பிராந்தியம் 1000ஜத் தாண்டி 1090ஆகியது. கல்முனைப்பிராந்தியத்துள் வரும் அக்கரைப்பற்று பிரதானசந்தை மூலமாக ஏற்பட்ட உபகொத்தணிப்பரவலும்; 1000த்தாண்டியது. அந்த உப கொத்தணியில் இதுவரை 1052பேர் இனங்காணப்பட்டுள்ளனர். பின்னணியில் மட்டக்களப்பும் திருகோணமலையும் யாரை யார் முந்துவது என்ற போர்வையில் தினம் தினம் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 12மணிநேரத்தில் மட்டு. மாவட்டத்தில்; செங்கலடியில் களுவாஞ்சிகுடியில் தலா 4பேரும்; கோறளைப்பற்றில் 2பேரும் ஏறாவுரில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தெற்கில் 9பேரும் காரைதீவில் 3பேரும் அட்டாளைச்சேனையில் 2பேரும் சாய்தமருதில்திருமலையில் உப்புவெளியில் ஒருவருமாக 27பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1090பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 532பேரும் திருமலை மாவட்டத்தில் 371 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 99பேருமாக 2092பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர். மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. 12மரணங்கள்! இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி ஆலையடிவேம்பு உகனை காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 12 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. கல்முனைப்பிராந்தியத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 05பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 10 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது. இவ்வார உயர் அபாய பிரதேசங்கள் கிழக்கில் உயர் அபாய பிரதேசங்களாக இவ்வாரம் ஏழு பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிண்ணியா கல்முனைதெற்கு திருமலை உப்புவெளி காரைதீவு காத்தான்குடி அம்பாறை ஆகிய பிரதேசங்களே அவை. கல்முனை பிராந்தியத்தில் 1090.. கல்முனைப்பிராந்தியத்தில் 1090ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 1052பேர் இனங்;காணப்பட்டுள்ளனர். அதில் அக்கரைப்பற்று 312தொற்றுக்கள் அடுத்ததாக கல்முனை தெற்கு 299 அட்டாளைச்சேனை 91 பொத்துவில் 82 சாய்ந்தமருது 67 காரைதீவு 53 ஆலையடிவேம்பு 41 சம்மாந்துறை 34 இறக்காமம் 24 நிந்தவுர் 26 கல்முனைவடக்கு 28 நாவிதன்வெளி 17 திருக்கோவில் 17 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த பல நாட்களாக காரைதீவுப்பிரதேசத்தில் 48ஆக இருந்த தொற்று நேற்று இனங்கண்ட 03பேருடன் 53 ஆக உயர்ந்துள்ளது. கல்முனை மாநகரில் 395.. அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 395 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கி;ல் 299பேரும் சாய்ந்தமருதில் 68பேரும் கல்முனை வடக்கில் 28பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தனியொருபிரிவாக காத்தான்குடியில் 3பேரும் அட்டாளைச்சேனையில் 2பேரும் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனையின் 11 கி.சே.பிரிவுகளில் முடக்கச்செயற்பாடு 18வது நாளாக அமுலில்உள்ளது. மட்டக்களப்பில் 532... மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 532ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 215 பேரும் கோறளைப்பற்றுமத்தியில் 73 பேரும் ஓட்டமாவடியில் 43பேரும் களுவாஞ்சிக்குடியில் 37பேரும் மட்டக்களப்பில் 52பேரும் ஏறாவூரி;;ல் 30 பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். திருமலையில் 371... திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 371ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 148பேரும் கிண்ணியாவில் 81பேரும் மூதூரில் 56பேரும்; உப்புவெளியில் 38பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. அம்பாறையில் 99... அம்பாறை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது. அங்கு கூடுதலாக அம்பாறை நகரில் 44பேரும் உகனயில் 29பேரும் தமனையில் 10பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள்99பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 1084பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 52586பேருக்கு பிசிஆர் பரிசோதனை இதுவரை கிழக்கில் 52586பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள். கல்முனைப்பிராந்தியத்தில் 23627 சோதனைகளும் மட்டக்களப்பில் 15117 சோதனைகளும் அம்பாறையில் 4227 சோதனைகளும் திருகோணமலையில் 9615 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 08சிகிச்சை நிலையங்களில் 3300 அனுமதி கிழக்கில் இதுவரை 08கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருக்கின்றன. கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 555கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். (22.01.2021) வரை 3300பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 2730பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.15பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். ( வி.ரி.சகாதேவராஜா) |
20.01.21- சம்மாந்துறையில் பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம்..
சம்மாந்துறையில் பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம் அதிபர் ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்:12மணியுடன் பாடசாலைகள் பூட்டு வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி என்கிறார் கோட்டக்கல்விப்பணிப்பாளர் சபூர்தம்பி.. சம்மாந்துறையில் பரப்பப்பட்ட பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம் நிலவியது.இதனையடுத்து சம்மாந்துறையிலுள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து தங்கள் பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர். இச் சம்பவம்(19.01.2021) சம்மாந்துறைப் பாடசாலைகளில் நடைபெற்றுள்ளது.இச் சம்பவத்தால் சம்மாந்துறை பிரதேசப் பாடசாலைகளில் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது. சில பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நிலையில் தொடராகப் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்த பெற்றோர் பாடசாலைகளின் நுழைவாயிலை முற்றுகையிட்டதுடன் தங்கள் பிள்ளைகளைத் தருமாறு நிருவாகத்தினரிடம் மன்றாட்டத்தில் ஈடுபட்டனர்.சிலர் அதிபர் ஆசிரியர்களுடன் வாக்கவாதத்திலும் ஈடுபட்டனர். இது பற்றித் தெரியவருவதாவது பாடசாலைகளில் மாணவர்களுக்கு பீ.சி.ஆர் எடுப்பதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனைக் கேள்வியுற்ற பெற்றோர் தம்பிள்ளைகளை வீட்டுகளுக்கு அழைத்துச் செல்ல முனைந்த போதே பாடசாலைகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது விடயத்தை ஆராந்த போது மாணவர்களைப் பீ.சீ.ஆர். எடுத்த சம்பவம் எதுவும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் நடக்கவில்லையென்று தெரியவந்துள்ளது. ZACமாணவர்களுக்கு பீ.சீ.ஆர். எடுத்த நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது வதந்தியென்றும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பொலிசார் தெரிவித்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை. மாகாண மட்டப் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த மாணவர்கள் இடைநடுவில் பெற்றோர்களுடன் அனுப்பப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவத்தால் ஆசிரியர்களைத் தவிர மாணவர்கள் எவரும் இல்லாத நிலையில் பாடசாலைகள் வெறிச்சோடிக் கிடந்தை அவதானிக்க முடிந்தது வீணான வதந்தியால் வீணடிக்கப்பட்ட கல்வி இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை கோட்டக்கல்விப்ணிப்பாளர் எம்.சபூர்த்தம்பியிடம் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார். எனது கோட்டத்தில் 37பாடசாலைகள் உள்ளன. அதில் 9தமிழ்ப்பாடசாகைள் மீதி 28முஸ்லிம் பாடசாலைகள்.அங்கு 16000 மாணவர்கள் 1500ஆசிரியர்கள் உள்ளனர். இன்று காலை 10.30மணியளவில் பரப்பட்ட பிசிஆர் வதந்தியால் பெற்றோர்கள் பாடசாலைகளை முற்றுகையிட்டு பிள்ளைகளை அழைத்துச்சென்றனர். சிலர் மதிலுக்கு மேலால் ஏறி உட்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தம் பிள்ளைகளை கூட்டிச்சென்றனர். இதனர் முஸ்லிம் பாடசாலைகள் 12மணியளவில் இழுத்துமூடப்பட்டன. அனைவரும் வெளியேறினார்கள். ஒருவாறாக நீண்டநாளைக்குப்பிறகு இவ்வாரம்தான் பாடசாலைகள் வமைக்குத்திரும்பின. அதற்குள் இப்படியொரு துர்பாக்கியநிலைமை.இனி இந்த நிலைமையிலிருந்து விடுபட எத்தனை நாட்களாகுமோ தெரியாது. நான் ஊரிலுள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்சபையிடம் கதைத்துள்ளேன்.எமது பணிப்பாளரிடமும் கூறியுள்ளேன் என்றார். வி.ரி.சகாதேவராஜா |
17.01.21- புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்..
பருத்தித்துறை மெதடிஸ்ட் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி - 174 யாழ்ப்பாணம் வேம்படி உயர்மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி - 173 யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி வெட்டுப்புள்ளி - 170 கொழும்பு ரோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி - 187 பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி - 181 கொழும்பு இஸிபதன மற்றும் விசாகா கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி - 194 டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி - 179 |
15.01.21- பதில் தவிசாளராக நியமிக்கப்பட்ட பார்த்தீபனுக்கு வாள்வெட்டு..
பதில் தவிசாளராக நியமிக்கப்பட்ட பார்த்தீபனுக்கு வாள்வெட்டு பொத்துவில் இறக்காமம் பிரதேசசபைகளுக்கு பதில்தவிசாளர்கள்.. பொத்துவில் பிரதேசசபைக்கு பதில்தவிசாளராக நியமிக்கப்பட்ட உபதவிசாளர் பெருமாள பார்த்தீபனுக்கு வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் சத்தமிட்டுள்ளார் விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன .இது தொடர்பில் பொத்துவில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இரு பதில் தவிசாளர்கள் நியமனம் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கு பதில் தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவித்தலை வர்த்தமானி சட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விடுத்துள்ளார். பொத்துவில் இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் 2021ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கை (பட்ஜெட்) நிறைவேற்ற முடியாமல் போனதையிட்டு ஏற்பட்ட சிக்கலான நிலமையைத் தீர்ப்பதற்கு விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாகவும் குறித்த விசாரணை முடியும் வரை மேற்படி சபைகளின் தவிசாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உடனடியாக செற்படும் வண்ணம் பொத்துவில் பிரதேச சபைக்கு உப தலைவரான பெருமாள் பார்த்தீபன் இறக்காமம் பிரதேச சபைக்கு உப தலைவரான ஏ.எல். நௌபர் ஆகியோரின் பெயர்கள் வர்த்தமானி பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ( வி.ரி.சகாதேவராஜா) |
02.01.20- புத்தாண்டில் கிழக்கில் 1200ஜத் தாண்டிய கொரோனாதொற்று..
புத்தாண்டில் கிழக்கில் 1200ஜத் தாண்டிய கொரோனாதொற்று! கல்முனையில் 809 மட்டக்களப்பில் 212 திருமலையில் 135 அம்பாறையில் 30.. கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம் 1200ஜத் தாண்டியது.புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் திவீரமாகிவருகின்றது. அங்கு நேற்றுவரை 1209 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 212பேரும் கல்முனை பிராந்தியத்தில் 809பேரும் திருமலை மாவட்டத்தில் 135பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 30பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.கல்முனையில் கண்டுபிடிக்கப்பட்ட 809 தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்தே கிழக்கின் நிலைமை இவ்விதம் அதிகரித்துள்ளது. கல்முனை தெற்கில் 186 பேரும் காத்தான்குடியில் திடீரென 69பேரும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து நிலைமை மோசமாகியது. இதுவரை சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு மற்றும் காத்தான்குடியில் 06 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. கல்முனை பிராந்தியத்தில் 809.. கல்முனைப்பிராந்தியத்தில் 809ஆக தொற்றுக்கள் இனங்காணப்பட்டிருக்கின்றன. இப்பிராந்தியத்துள்வரும் அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 771பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் அக்கரைப்பற்று306 அடுத்ததாக கல்முனை தெற்கு 186 தொற்றுக்கள் பொத்துவில் 76 அட்டாளைச்சேனை 71 சாய்ந்தமருது 37 ஆலையடிவேம்பு 31 இறக்காமம் 23 சம்மாந்துறை 17 கல்முனைவடக்கு 14 திருக்கோவில் 15 நிந்தவுர் 13 காரைதீவு 13 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பிராந்தியத்தில் 10க்கு குறைந்த எண்ணிக்கையுடைய ஒரேயொரு சுகாதாரப்பிரிவு நாவிதன்வெளிப்பிரிவு .அங்கு இதுவரை ஆக 07தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். கல்முனை மாநகரில் 237.. அதேவேளை கல்முனை மாநகரஎல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 2367 தொற்றுக்களாக அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 186பேரும் சாய்ந்தமருதில் 37பேரும் கல்முனை வடக்கில் 14பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இவ்விதம் 186 ஆக உயர்ந்துள்ளமையால் அங்கு முடக்கச்செயற்பாடு 5வது நாளாக அமுலில்உள்ளது. மட்டக்களப்பில் 208... மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 69 பேரும் கோறளைப்பற்றில் 61 பேரும் களுவாஞ்சிக்குடியில் 23பேரும் ஏறாவூரில் 15 பேரும் மட்டக்களப்பில் 12பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர். திருமலையில் 134... திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 64பேரும் மூதூரில் 41பேரும் கிண்ணியாவில் 11பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர்.அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத்தொற்றாளர்கள் 29பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 809பேர் கல்முனை சுகாதாரப்பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 36510பேருக்கு பிசிஆர் .. இதுவரை கிழக்கில் 36510பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள். கல்முனைப்பிராந்தியத்தில் 19258 சோதனைகளும் மட்டக்களப்பில் 9838 சோதனைகளும் அம்பாறையில் 2816 சோதனைகளும் திருகோணமலையில் 4598 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 08சிகிச்சை நிலையங்களில் 2487 அனுமதி கிழக்கில் இதுவரை 06கொரோனா சிகிச்சை நிலையங்கள் இருந்துவந்தன. புதிதாக மட்டுமாவட்டத்தில் பெரியகல்லாறு மற்றும் திருமi மாவட்டத்தில் குச்சவெளியிலும் இரு வைத்தியசாலைகள் சிகிச்சை நியைங்களாக மாற்றப்பட்டுள்ளன. அத்துடன் கிழக்கில் 08 கொரோனா சிகிச்சை நிலையங்களாகியுள்ளது. கிழக்கிலுள்ள 08 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 496கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (01.01.2021) வெள்ளிக்கிழமை வரை 2487பேர் மேற்படி 8 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1980பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.11பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 807பேர் அனுமதிக்கப்பட்டு 678பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 125பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 05 கட்டில் தேவையாகவுள்ளன. மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 35 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 109 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 61பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 75 பேரும் மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 67 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 13பேரும் குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 3பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வி.ரி.சகாதேவராஜா |
02.01.21- முடக்கப்பட்ட கல்முனை மக்களுக்கு உலருணவு..
முடக்கப்பட்ட கல்முனை மக்களுக்கு உலருணவு தேரர் உறுப்பினர் அரசஅதிபர் சந்திப்பையடுத்து நடவடிக்கை.. கடந்த ஜந்து(5) நாட்களாக முடக்கப்பட்ட கல்முனை மக்களுக்கான உலருணவை வழங்க அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைவாக இருவாரங்களுக்குத் தேவையான 10ஆயிரம் ருபா பெறுமதியான உலருணவுப்பொதியை இருகட்டங்களில் பிரதேசசெயலகமூடாக விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் நேற்று(01.01.2021) அம்பாறை மாவட்ட அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய விரைவாக அவை வழங்கப்படவிருக்கிறது. கல்முனை முடக்கப்பட்டு 5 நாட்களாகியும் அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்பகுதிக்குள் உள்ள ஏழைமக்கள் உண்ணஉணவின்றி பட்டினியால் வாடஆரம்பித்துள்ளனர். இது விடயத்தை அம்பாறை அரச அதிபரிடம் குறித்த தேரரும் உறுப்பினரும் எடுத்துக்கூறினர். கொழும்பிலிருந்து அதற்கான உத்தரவு கிடைத்ததும் உடனடியாக உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். நேற்று இப்பிரதேசம் இராணுவத்தளபதியால் தணிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக உத்தியோகபூர்வமாக அறிவிக்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வி.ரி.சகாதேவராஜா |
02.01.20- திருக்கோவிலில் கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு..
தேசிய கலாசார அலுவல்கள் திணைக்களமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து பிரதேச கலைஇலக்கிய விழாப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. திருக்கோவில் கலாசார அலுவல்கள் பிரிவின் ஏற்பாட்டில் நடாத்திய திறந்த பிரிவில் வெற்றி பெற்றமாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது . நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கான பரிசுகள் பாடசாலை அதிபர்களிடம் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் வழங்கீவைத்தார்.இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் செல்வி எம்.அனோஜா கலாசாரஅபிவிருத்தி உத்தியோகத்தர் ரி. நிறோஜினி மற்றும் இந்து கலாசார உத்தியோத்தர் செல்வி பி.சர்மிளா சிரேஷ்ட கிராமசேவக உத்தியோகத்தார். கண.இராஜரெட்ணம்பட்டதாரி பயிலூனர் ரி.யோகேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர். வி.ரி.சகாதேவராஜா |
1-10 of 2401